
‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். இது, கார்த்தியின் 27-வது படமாகும்.
2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கடந்த பிப்ரவரியில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிக்கும் இந்த புதிய திரைப்படத்தின் பெயர் 'மெய்யழகன்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெய்யழகன் படத்தின் அடுத்த முக்கிய அறிவிப்பு இன்று(மே 23) இரவு 7 மணிக்கு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.