தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஓடிடி வெளியீடு!

நடிகர் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

News image

குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமார்

Updated On :3 மே 2025, 2:16 pm IST

நடிகர் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ எனும் திரைப்படம் கடந்த ஏப்.10 ஆம் தேதியன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இதுவரை காணாத மாறுபட்ட தோற்றத்தில் அஜித் குமார் நடித்திருந்தது அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் இந்தப் படம் வெளியான 2 வாரங்களில் சுமார் ரூ.250 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்டது.

இத்துடன், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்தப் படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ், சுனில், திரிஷா, சிம்ரன், பிரபு, பிரசன்னா, ஜாக்கி ஷரோஃப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள், பிரபல பாடல்களின் ரீ-கிரியேஷன் என ரசிகர்களைக் கவர்ந்திழுத்த இந்தப் படம் தற்போது ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.

வரும் மே.8 ஆம் தேதியன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.