‘ஒரு சிறு இசை’ எனும் சிறுகதை நூலுக்காக எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது. வண்ணதாசன் ‘கல்யாண்ஜி’ என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார். இவர் நெல்லையைச் சேர்ந்தவர். சுதந்திரப் போராட்ட வீரரும், பழம் பெரும் படைப்பாளியுமான தி.க.சி அவர்களின் புதல்வருமான வண்ணதாசனுக்கு இந்தியப் படைப்புலகின் உன்னதமான விருது வழங்கப்பட்டிருப்பது அவரது வாசகர்களையும், தமிழ் படைப்புலகத்தையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழில் இவரை வாசிக்காத இளம் படைப்பாளிகளே இருக்க வாய்ப்பில்லை எனும்படியாக அனைவரையும் வசீகரிக்கும் விதமான எழுத்துக்குச் சொந்தக்காரர் இவர்.
வண்ணதாசனின் வலைத்தள முகப்பில் காணக்கூடிய செய்தி ஒன்று போதும் அவரது ஒட்டுமொத்த படைப்புகளையும் வரையறுக்க.
‘இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.’
தமிழ் தெரிந்த அனைவருமே வண்ணதாசனை நிச்சயம் வாசிக்க வேண்டும். இந்த வாழ்வின் மென்மையான உன்னதங்களை அறிய. வாழ்வின் மீதான எல்லையற்ற பிரியங்களை தொகுத்துக் கொள்ளவாவது வாசித்துப் பாருங்கள் இளையோரே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாலியல் குற்றங்கள் பற்றி வாய் திறக்காத முதல்வர்! திமுக எம்எல்ஏவின் கேள்விக்கு எதிர்ப்பு!
அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு!

எந்த கோயிலில் என்ன விசேஷம்?
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



