நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இன்றைய மருத்துவ சிந்தனை: சந்தனம்

உடல் சூடு , அழற்சி குணமாக பசும்பாலில் சந்தனக்கட்டையை

News image
Updated On :20 அக்டோபர் 2017, 3:46 am

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


சந்தனம்:

  • சிறுநீர் எரிச்சல் தீர சந்தனம் தூள் (1 டீஸ்பூன்) எடுத்து அரை லிட்டர்  தண்ணீரில்  காய்ச்சி  வடிகட்டி குடிநீர் செய்து குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.
  • முகப்பரு , படர் தாமரை குணமாக சந்தனம் கட்டையை, எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக உரைத்து பசையாக செய்து  படர் தாமரை, வெண்குஷ்டம், முகப் பரு உள்ள இடங்களில் பூசி வந்தால் இவை அனைத்தும் குணமாகும்.
  • இரத்த மூலம் குணமாக சந்தனம் தூள் (2 டீஸ்பூன்), அரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி குடிநீராக செய்து குடித்து வந்தால் இரத்த மூலம் குணமாகும்.
  • சர்க்கரை குணமாக நெல்லிக்காய்ச்சாறு (15 மில்லி)  சந்தனம் சுண்டைக்காய் அளவு எடுத்து விழுதாக அரைத்து நெல்லிக்காய் சாறுடன்   கலந்து 48 நாளகள் குடித்து வந்தால் நீரிழிவு நோய்  குணமாகும்.
  • உடல் சூடு , அழற்சி குணமாக பசும்பாலில் சந்தனக்கட்டையை உரைத்து புளியங்கொட்டை அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வெட்டை சூடு,  உடல் சூடு , சிறுநீர் பாதையில் உண்டாகும் வலி , அழற்சி போன்றவை குணமாகும்.
  • கண்கட்டி குணமாக சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் நன்கு அரைத்து பசை போல் செய்து, கண் கட்டிகள் மீது பற்று போட வேண்டும். இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் இவ்வாறு செய்து வந்து காலையில் கழுவிவிட வேண்டும். 
  • 5 நாட்கள் தொடர்ச்சியாக இப்படி செய்து வந்தால் கண் கட்டி முற்றிலும் குணமாகும்.
  • காய்ச்சல் , நீர்க்கோவை நீங்க சந்தனத்தூள் (20 கிராம்) எடுத்து அதை (300 மி.லி) தண்ணீரில் போட்டு காய்ச்சி (150 மி.லி) வடிகட்டி காலை மதியம் இரவு என மூன்று வேளையும் (50 மில்லி ) வீதம் குடித்து வந்தால் நீர்க்கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு ,மந்தம், இதய வலி ஆகியவை தீரும்.
     

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.