தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

+8, +85, +65 தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பா? மத்திய அரசு எச்சரிக்கை

சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்..

News image

கோப்புப்படம்

Updated On :26 டிசம்பர் 2024, 10:07 am IST

+91 என்று தொடங்கும் எண்கள் அல்லாமல், +8, +85, +65 போன்று தொடங்கும் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் டிஜிட்டல் மயத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப மோசடிகளும் நாளுக்குநாள் புதுப்புது விதத்தில் உருவெடுத்து வருகின்றது.

தற்போது லேட்டஸ்ட்டாக சர்வதேச எண்களில் இருந்து ஒருவருக்கு தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள், அரசு அதிகாரிகளைப் போல் பேசி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில்,

”சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகளைத் தடுக்கும் அமைப்பை அக்டோபர் 22 அன்று தொலைத் தொடர்புத் துறை அறிமுகம் செய்தது. அடுத்த 24 மணிநேரத்தில் 1.35 கோடி அழைப்புகள், அதாவது சர்வதேச எண்களில் இருந்து இந்திய எண்களை தொடர்பு கொண்ட 90 சதவிகிதம் அழைப்புகள் மோசடி அழைப்புகளாக அடையாளம் காணப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேச எண்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் முறையை கையாண்டு வருகிறார்கள். அதனால், அறிமுகம் இல்லாத சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் 'சஞ்சார் சாத்தி இணையதளம் மூலம் புகார் அளிக்க வேண்டும்.

+91 இல் தொடங்காமல் +8, +85, +65 போன்ற எண்களில் தொடங்கும் சர்வதேச எண்களிலிருந்து அழைத்து அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இதுபோன்ற அழைப்புகளை தடுப்பதற்காக தொலைத் தொடர்பு துறை பிரத்யேகக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.

தற்பொது ஏர்டெல் நிறுவனம் சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளை சர்வதேச அழைப்பு என்று குறிப்பிடும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது. பிற நிறுவனங்களும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மோசடி அழைப்புகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு ‘காலர் ட்யூன்’ மற்றும் குறுஞ்செய்தி மூலம் விழிப்புணர்வு அளிக்க தொடங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.