எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

+8, +85, +65 தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பா? மத்திய அரசு எச்சரிக்கை

சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்..

News image

கோப்புப்படம்

Updated On :26 டிசம்பர் 2024, 10:07 am IST

+91 என்று தொடங்கும் எண்கள் அல்லாமல், +8, +85, +65 போன்று தொடங்கும் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் டிஜிட்டல் மயத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப மோசடிகளும் நாளுக்குநாள் புதுப்புது விதத்தில் உருவெடுத்து வருகின்றது.

தற்போது லேட்டஸ்ட்டாக சர்வதேச எண்களில் இருந்து ஒருவருக்கு தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள், அரசு அதிகாரிகளைப் போல் பேசி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில்,

”சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகளைத் தடுக்கும் அமைப்பை அக்டோபர் 22 அன்று தொலைத் தொடர்புத் துறை அறிமுகம் செய்தது. அடுத்த 24 மணிநேரத்தில் 1.35 கோடி அழைப்புகள், அதாவது சர்வதேச எண்களில் இருந்து இந்திய எண்களை தொடர்பு கொண்ட 90 சதவிகிதம் அழைப்புகள் மோசடி அழைப்புகளாக அடையாளம் காணப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேச எண்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் முறையை கையாண்டு வருகிறார்கள். அதனால், அறிமுகம் இல்லாத சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் 'சஞ்சார் சாத்தி இணையதளம் மூலம் புகார் அளிக்க வேண்டும்.

+91 இல் தொடங்காமல் +8, +85, +65 போன்ற எண்களில் தொடங்கும் சர்வதேச எண்களிலிருந்து அழைத்து அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இதுபோன்ற அழைப்புகளை தடுப்பதற்காக தொலைத் தொடர்பு துறை பிரத்யேகக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.

தற்பொது ஏர்டெல் நிறுவனம் சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளை சர்வதேச அழைப்பு என்று குறிப்பிடும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது. பிற நிறுவனங்களும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மோசடி அழைப்புகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு ‘காலர் ட்யூன்’ மற்றும் குறுஞ்செய்தி மூலம் விழிப்புணர்வு அளிக்க தொடங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.