போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

நமீபியாவிற்கு 1,000 டன் அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி!

தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் நமீபியாவுக்கு 1,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

News image

அரிசி | கோப்புப் படம் - dot com

Updated On :29 ஜூலை 2024, 2:45 pm

புதுதில்லி: தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் நமீபியாவுக்கு 1,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பதற்காக ஜூலை 20, 2023 முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி தடை செய்யப்பட்டிருந்தாலும், கோரிக்கையின் அடிப்படையில் சில நாடுகளுக்கு அவர்களின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு வழங்கிய அனுமதியின் அடிப்படையில் ஏற்றுமதி அனுமதிக்கப்படுகிறது.

தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் நமீபியாவுக்கு 1,000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசி ஏற்றுமதி அனுமதிக்கப்படுகிறது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

வெள்ளை அரிசி ஏற்றுமதி ஏப்ரல் - மே மாதங்களில் 12.27 கோடி அமெரிக்க டாலராகவும், 2023-24 முழுவதும் 85.253 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.

நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இது போன்ற ஏற்றுமதியை இந்தியா இதற்கு முன்பு அனுமதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.