புதுதில்லி: தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் நமீபியாவுக்கு 1,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பதற்காக ஜூலை 20, 2023 முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி தடை செய்யப்பட்டிருந்தாலும், கோரிக்கையின் அடிப்படையில் சில நாடுகளுக்கு அவர்களின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு வழங்கிய அனுமதியின் அடிப்படையில் ஏற்றுமதி அனுமதிக்கப்படுகிறது.
தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் நமீபியாவுக்கு 1,000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசி ஏற்றுமதி அனுமதிக்கப்படுகிறது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
வெள்ளை அரிசி ஏற்றுமதி ஏப்ரல் - மே மாதங்களில் 12.27 கோடி அமெரிக்க டாலராகவும், 2023-24 முழுவதும் 85.253 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.
நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இது போன்ற ஏற்றுமதியை இந்தியா இதற்கு முன்பு அனுமதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

பிரசாரம் செய்ய வந்ததை விட்டுவிட்டு சைக்கிள் ஓட்டலாமா விஜய் சார்?

வெளிநாடுகளுக்கு ரூ.38,424 கோடிக்கு இந்திய ஆயுதங்கள் ஏற்றுமதி: முன்னெப்போதும் இல்லாத உச்சம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

