தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் மக்களவையில், மக்களவைத் தலைவர் பதவியை கோரலாம் என சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.
இதுகுறித்து சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் ஆதித்ய தாக்கரே வெளியிட்டுள்ள ’எக்ஸ்’ தளப் பதிவில், மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ள பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் நிமிடத்தில், தனது கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளை உடைக்க முயற்சிக்கும்.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள கட்சிகளுக்கு ஒரு பணிவான ஆலோசனை, முடிந்தவரை மக்களைவையில், மக்களவைத் தலைவர் பதவியை பெறுங்கள். பாஜகவினர் உங்களுடன் ஆட்சி அமைக்கும் நிமிடத்தில், அவர்கள் வாக்குறுதிகளை மீறுவார்கள். உங்கள் கட்சிகளையும் உடைக்க முயற்சிப்பார்கள். நீங்கள் அதை முன்பே அனுபவித்திருப்பீர்கள்” என்று தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளையும் 'டேக்' செய்து குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை மறைமுகமாக ஆதித்ய தாக்கரே சுட்டிக்காட்டினார்.
பாஜகவுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க, தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு முக்கியமாக உள்ளது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதில் பாஜக 240 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் கைப்பற்றி பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் மக்களவையில், மக்களவைத் தலைவர் பதவியை கோரலாம் என சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.
இதுகுறித்து சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் ஆதித்ய தாக்கரே வெளியிட்டுள்ள ’எக்ஸ்’ தளப் பதிவில், மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ள பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் நிமிடத்தில், தனது கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளை உடைக்க முயற்சிக்கும்.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள கட்சிகளுக்கு ஒரு பணிவான ஆலோசனை, முடிந்தவரை மக்களைவையில், மக்களவைத் தலைவர் பதவியை பெறுங்கள். பாஜகவினர் உங்களுடன் ஆட்சி அமைக்கும் நிமிடத்தில், அவர்கள் வாக்குறுதிகளை மீறுவார்கள். உங்கள் கட்சிகளையும் உடைக்க முயற்சிப்பார்கள். நீங்கள் அதை முன்பே அனுபவித்திருப்பீர்கள்” என்று தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளையும் 'டேக்' செய்து குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை மறைமுகமாக ஆதித்ய தாக்கரே சுட்டிக்காட்டினார்.
பாஜகவுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க, தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு முக்கியமாக உள்ளது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதில் பாஜக 240 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் கைப்பற்றி பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதளம் முடக்கம்: இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கண்டன ஊா்வலம்

ஜூன் 18-ல் மாநிலங்களவைத் தேர்தல்! ஆந்திரத்தில் 4 இடங்களையும் கைப்பற்றும் தேஜகூ!

கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்?: காா்கேயிடம் அறிக்கை சமா்ப்பிப்பு

கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



