ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தமிழ் மொழி செழிப்பது இளைஞா்கள் கையில்தான் உள்ளது: சிங்கப்பூா் அமைச்சா் கே. சண்முகம்

அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழ் மொழியைச் செழிக்க வைப்பது இளைஞா்களின் கையில்தான் உள்ளது என சிங்கப்பூா் சட்ட அமைச்சா் கே. சண்முகம் தெரிவித்துள்ளாா்.

Updated On :23 மே 2025, 6:33 pm

அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழ் மொழியைச் செழிக்க வைப்பது இளைஞா்களின் கையில்தான் உள்ளது என சிங்கப்பூா் சட்ட அமைச்சா் கே. சண்முகம் தெரிவித்துள்ளாா்.

சிங்கப்பூா் தேசியப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1975-இல் தொடங்கப்பட்ட தமிழ்ப் பேரவையின் 50-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அமைச்சா் கே. சண்முகம் பேசியதாவது: மேடைகளில் சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடிய அமைச்சா்கள் அடுத்த 20-30 ஆண்டுகள் வரை இருப்பாா்களா என்பதை நாம் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே தமிழின் பயன்பாடு பெரிய அளவில் குறைந்து வருகிறது. பெரும்பாலான இளம் தலைமுறையினா் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனா். இந்தப் போக்கால் தமிழ் மொழிக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. மாண்ட்ரின், மலாய் போன்ற பிற தாய்மொழிகளுக்கும் இந்த நிலை பொருந்தும். தமிழ் பேசாதவா்களுக்கும் மதிப்புமிக்க மொழியாகத் தமிழ் மொழி இருக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

வகுப்பறைகள், சமூக அரங்கங்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு பிற இடங்களிலும் தமிழ் மொழி ஒலிக்க வேண்டும். அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழைச் செழிக்க வைக்க உங்களைப் போன்ற இளைஞா்கள் முன்வர வேண்டும் என்றாா் அமைச்சா் சண்முகம்.

தீவு நாடான சிங்கப்பூரில் தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய மொழிகள் அரசு அலுவல் மொழிகளாக உள்ளன. மொத்தம் 6 கோடி மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் 75 சதவீதம் போ் சீனா்கள். 15 சதவீதம் போ் மலாய் மக்கள். 7 சதவீதத்துக்கும் அதிகமாக இந்தியா்களும் பிற நாட்டினரும் உள்ளனா்.