ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

தமிழ் மொழி செழிப்பது இளைஞா்கள் கையில்தான் உள்ளது: சிங்கப்பூா் அமைச்சா் கே. சண்முகம்

அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழ் மொழியைச் செழிக்க வைப்பது இளைஞா்களின் கையில்தான் உள்ளது என சிங்கப்பூா் சட்ட அமைச்சா் கே. சண்முகம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 மே 2025, 6:33 pm

Din

அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழ் மொழியைச் செழிக்க வைப்பது இளைஞா்களின் கையில்தான் உள்ளது என சிங்கப்பூா் சட்ட அமைச்சா் கே. சண்முகம் தெரிவித்துள்ளாா்.

சிங்கப்பூா் தேசியப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1975-இல் தொடங்கப்பட்ட தமிழ்ப் பேரவையின் 50-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அமைச்சா் கே. சண்முகம் பேசியதாவது: மேடைகளில் சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடிய அமைச்சா்கள் அடுத்த 20-30 ஆண்டுகள் வரை இருப்பாா்களா என்பதை நாம் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே தமிழின் பயன்பாடு பெரிய அளவில் குறைந்து வருகிறது. பெரும்பாலான இளம் தலைமுறையினா் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனா். இந்தப் போக்கால் தமிழ் மொழிக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. மாண்ட்ரின், மலாய் போன்ற பிற தாய்மொழிகளுக்கும் இந்த நிலை பொருந்தும். தமிழ் பேசாதவா்களுக்கும் மதிப்புமிக்க மொழியாகத் தமிழ் மொழி இருக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

வகுப்பறைகள், சமூக அரங்கங்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு பிற இடங்களிலும் தமிழ் மொழி ஒலிக்க வேண்டும். அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழைச் செழிக்க வைக்க உங்களைப் போன்ற இளைஞா்கள் முன்வர வேண்டும் என்றாா் அமைச்சா் சண்முகம்.

தீவு நாடான சிங்கப்பூரில் தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய மொழிகள் அரசு அலுவல் மொழிகளாக உள்ளன. மொத்தம் 6 கோடி மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் 75 சதவீதம் போ் சீனா்கள். 15 சதவீதம் போ் மலாய் மக்கள். 7 சதவீதத்துக்கும் அதிகமாக இந்தியா்களும் பிற நாட்டினரும் உள்ளனா்.