மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை: பொன். ராதாகிருஷ்ணன்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் விருப்பம். இதற்கு கட்சி மேலிடம் அனுமதி அளிக்கும். வேட்பாளர் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம்

News image
Updated On :14 ஜனவரி 2015, 12:20 pm

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரையில் இருந்து விமானம் மூலம் புதன்கிழமை சென்னை வந்த அவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் விருப்பம். இதற்கு கட்சி மேலிடம் அனுமதி அளிக்கும். வேட்பாளர் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம் தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இதற்காக மத்திய வனத்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறேன்.இலங்கையின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் வரும் 18-ஆம் தேதி தில்லி வருகிறார். அப்போது தமிழக மீனவர் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மத்திய அரசு அழுத்தம் திருத்தமாக விவாதிக்கும்.

பாஜக எம்.பி. தருண் விஜய் மேற்கொண்டுள்ள திருவள்ளுவர் திருப்பயணம் குறித்து சிலர் விமர்சிக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. தமிழும், திருவள்ளுவரும் குறிப்பிட்ட கட்சியோ, குடும்பமோ சொந்தம் கொண்டாட முடியாது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.