சிவகங்கை மாவட்டம் துவரக்குறிச்சியை சேர்ந்த 9 பேர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகிலுள்ள குலதெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்றனர்.
அந்த வாகனம் நத்தம் வத்தலகுண்டு வழியாக வரும் போது ஒரு பள்ளி வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் டாட்டா ஏஸ் வாகனத்தில் வந்த 2 பேர் பலியாயினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 5 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் 2 பேர் தேனி அரசுக் கல்லூரி மருத்தவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வேன் குழந்தைகளை ஏற்ற சென்ற போது இந்த விபத்து நேர்ந்ததால் வேனில் யாரும் இல்லை. வேன் டிரைவரும் அதிர்ஷடவசமாக தப்பினார். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்

ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக்கொடி! கனிமொழி எம்.பி. வேண்டுகோள்! | DMK

இமயமலையில் தொலைந்த அணுசக்தி சாதனம்... மிஸ்டர் எக்ஸ் படத்தின் முன்னோட்ட விடியோ!

ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

