இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.01,139-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் 3163-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39174- ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4970 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 134 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.01,139-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் 3163-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39174- ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4970 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 134 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா நோய்த்தொற்று உருவானது எப்படி என்பது குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணையை உலக சுகாதார அமைப்பு நடத்துவதற்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளது.விரிவான செய்திக்கு...
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 820 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் மட்டும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,117 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 5242 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,927-லிருந்து 96,169-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 157 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 2,872-லிருந்து 3,029-ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 536 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 342 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, அங்கு மொத்த பாதிப்பு 1,74,697 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சிங்கப்பூரில் மேலும் 305 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,197 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 42,125 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உள்ள ஓப்போ மொபைல் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பணியாற்றிய 6 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
புது தில்லி: சமீப நாள்களில் செய்திகளைப் படித்தவர்களும், பார்த்தவர்களும் இந்த புகைப்படத்தை நிச்சயம் பார்க்கத் தவறியிருக்க முடியாது. விரிவான செய்திக்கு..
போபால்: குவைத்தில் இருந்து இந்தூர் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 130 பயணிகளில் 19 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை ராயபுரத்தில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,185 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கோடம்பாக்கம் உள்ளது. இங்கு 1,041 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சிங்கப்பூரில் மேலும் 682 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். மே 17 ஆம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..
உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,720,077 -ஆக அதிகரித்துள்ளது, இறப்பு எண்ணிக்கை 3,13,216 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 18,11,658 பேர் குணமடைந்து வீடு திரு்பியுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு...