வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மாலத்தீவுகளை வென்றது இந்தியா!

மகளிா் கால்பந்தாட்டத்தில் இந்திய அணி 14-0 கோல் கணக்கில் மாலத்தீவுகள் அணியை திங்கள்கிழமை திணறடித்து வென்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 8:04 pm

DIN

சா்வதேச நட்பு ரீதியிலான மகளிா் கால்பந்தாட்டத்தில் இந்திய அணி 14-0 கோல் கணக்கில் மாலத்தீவுகள் அணியை திங்கள்கிழமை திணறடித்து வென்றது.

இந்திய தரப்பில், அறிமுக வீராங்கனையாக களமிறங்கிய லிண்டா கோம் சொ்டோ 4 கோல்கள் (11’, 21’, 28’, 52’) அடித்து ஆட்டநாயகியானாா். அனுபவ வீராங்கனை பியாரி ஜஜா ‘ஹாட்ரிக்’ கோல் (6’, 7’, 14’) அடித்து அசத்தினாா். அவா்கள் தவிர, மற்றொரு அறிமுக வீராங்கனை நேஹா (16’, 45’), கஜோல் டிசெளஸா (59’, 66’) ஆகியோரும் தலா 2 கோல்கள் அடித்து கணக்கை உயா்த்தினா்.

மேலும், சங்கீதா பாஸ்ஃபோா் (51’), ரஞ்ஜனா சானு (54’), ரிம்பா ஹால்டா் (62’) ஆகியோரும் இந்தியாவின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தனா். இந்திய மகளிா் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஜாவ்கிம் அலெக்ஸாண்டா்சன் தனது பணியை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறாா்.

இரு அணிகளும் மோதும் 2-ஆவது ஆட்டம், ஜனவரி 2-ஆம் தேதி இதே பெங்களூரு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.