கார் விபத்து அனுபவம் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டதாக இந்திய அணியின் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் பயங்கர கார் விபத்தில் சிக்கினார். அதன்பின், அறுவை சிக்ச்சை மேற்கொண்டு மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்புவதற்கு ஓராண்டுக்கும் மேலானது. நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் அவர் தில்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடினார்.
இந்த நிலையில், கார் விபத்து அனுபவம் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டதாகவும், ரசிகர்கள் முன்பு விமான நிலையத்துக்கு சக்கர நாற்காலில் செல்வது பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்ததாக இந்திய அணியின் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக இந்திய வீரர் ஷிகர் தவான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் ரிஷப் பந்த் பேசியதாவது: கடந்த 2022 ஆம் ஆண்டு கார் விபத்து என வாழ்க்கையில் முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. கார் விபத்தில் சிக்கிய பிறகு, நான் உயிருடன் இருப்பேனா என்பதே எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.
கடவுள் என் மீது கருணை செலுத்தி என்னைக் காப்பாற்றி விட்டார். என்னால் விமான நிலையங்களுக்குச் செல்ல முடியவில்லை. சக்கர நாற்கலியுடன் ரசிகர்கள் முன் தோன்றுவது பதற்றமாக இருந்தது. விபத்துக்குப் பிறகு இரண்டு மாதங்களாக என்னால் சரியாக பல் துலக்கக்கூட முடியவில்லை. 6-7 மாதங்களாக தாங்க முடியாத அளவுக்கு வலி இருந்தது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஷப் பந்த் விலகல்!

ஆபாசமாகப் பேசிய ரிஷப் பந்த்..! சமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்கள்!

ரிஷப் பந்த் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: லக்னௌ பயிற்சியாளர்
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK





