வலங்கைமான் அருகே கடனை கேட்டு மிரட்டல்: இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை

வலங்கைமான் அருகே புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக்கி கடனை கேட்டு மிரட்டல் விடுத்ததால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலங்கைமான் அருகே கடனை கேட்டு மிரட்டல்: இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை

திருவாரூர்: வலங்கைமான் அருகே புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக்கி கடனை கேட்டு மிரட்டல் விடுத்ததால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரி வேலூரைச் சேர்ந்த ஸ்டாலின் இளைய மகன் ராஜேஷ் (27). கும்பகோணத்தில் உள்ள நுண்கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் ராஜேஷ் வேலை பார்த்து வரந்தார். 

இந்நிலையில், ராஜேஷ் ஆன்லைனில் கடன் செயலி மூலம், பலமுறை கடன் பெற்று திருப்பி செலுத்தி வந்துள்ளார்.

இதே போன்று இன்ஸ்டாகிராமில் வந்த லிங்க் மூலம் கடன் செயலி வாயிலாக கடன் பெற்று, திருப்பி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடன் வழங்கிய நிறுவனம் ராஜேஷிடம் பணம் கேட்டு வாட்ஸ்ஆப் வாயிலாக குறுஞ்செய்தி மற்றும் விடியோ வாயிலாக மிரட்டி உள்ளனர்.

தொடர்ந்து அந்நிறுவனம் ராஜேஷின் புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக்கி, அதை அவருக்கு அனுப்பி பணம் கேட்டுள்ளனர். இதில் மன அழுத்தத்திற்கு ஆளான ராஜேஷ், பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மயங்கி நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே ராஜேஷ் உயிரிழந்தார்.

இது குறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ராஜேஷ் செல்பேசியை கைப்பற்றி விசாரித்தில், அவரை தென் ஆப்பிரிக்காவில் இருந்து மிரட்டியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர் கடன் செயலி மூலம் கடன் பெற்று அதனால் ஏற்பட்ட பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com