எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஆங்கிலேயரின் கொடுங்கோன்மையை எதிர்த்து நின்றவர் வாஞ்சிநாதன்: குடியரசு துணைத் தலைவர் புகழஞ்சலி

சுதேசி இயக்கத்தை ஒடுக்க ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட கொடும் நடவடிக்கைகளை அஞ்சாமல் எதிர்த்து நின்றவர் வாஞ்சிநாதன் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தினார்.

News image

சி.பி.ராதாகிருஷ்ணன்

Updated On :18 ஜூன் 2026, 4:10 am IST

நமது நிருபர்

சுதேசி இயக்கத்தை ஒடுக்க ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட கொடும் நடவடிக்கைகளை அஞ்சாமல் எதிர்த்து நின்றவர் வாஞ்சிநாதன் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தினார்.

வாஞ்சிநாதனின் நினைவுநாளையொட்டி குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் "எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: விடுதலைப் போராட்ட வீரர், தியாகி வாஞ்சிநாதனின் நினைவு நாளில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், அவருக்கு மலரஞ்சலி செலுத்தினேன்.

அந்நிய ஆதிக்கத்தையும், சுதேசி இயக்கத்தை ஒடுக்க ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட கொடும் நடவடிக்கைகளையும் அஞ்சாமல் எதிர்த்து நின்றவர் அவர்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரிட்டிஷ் கலெக்டர், விடுதலைப் போராட்ட வீரர்கள் மீது மேற்கொண்ட அடக்குமுறைகளுக்கு மணியாச்சி ரயில் நிலையத்தில் பழி தீர்த்து, தேசத்துக்காகத் தனது இன்னுயிரையும் அர்ப்பணித்தவர்.

அவரது ஒப்பற்ற வீரமும், நாட்டுப்பற்றும், தன்னலமற்ற தியாகமும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற வீரர்களுக்கு உந்துசக்தியாக அமைந்தன. இந்நாளில், தியாகி வாஞ்சிநாதன் அவர்களின் புகழை, போராட்ட வாழ்வை அனைவரும் நன்றியுடன் நினைந்து போற்றுவோம் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.