வேலூர் மத்தியச் சிறையில் 1962ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா இருந்த நேரம். அப்போது அண்ணாவை அவருடைய துணைவியார் ராணி அம்மையார் பார்த்துவிட்டு சென்றார். அப்போது அண்ணா சிரித்தபடியே, ""ராணிக்கு நான் சிறையில் இருக்கிறேன் என்ற கவலை இருக்குமே தவிர, பிரிவு, துன்பம் எதுவும் இருக்காது. ஏனென்றால், நான் வெளியே இருக்கும் நாளில் கூட வாரத்துக்கு ஒருநாள்தான் என் ராணி என்னைப் பார்க்கும் வாய்ப்புண்டு என்றார்.