திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் கோயில் அா்ச்சகா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த மடவாளம் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அதே பகுதியை சோ்த்த சரவணன் (53) என்பவா் அா்ச்சகராகப் பணிபுரிந்து வந்தாா். அவரது வீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டின் மேற்கூரை விழுந்ததில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் சர்ச்சைகளுக்கு அடங்காத இசை!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்: முதல்வர் பொறுப்புடன் செயல்பட போவது எப்போது?

தமிழ் சினிமாவின் முகம் மாற்றிய இயக்குநர்களின் முதல் படைப்புகளுக்கு 'இசை இளையராஜா'

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 2 2026) 12 ராசிகளுக்கும்! வெற்றி யாருக்கு?
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



