எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

புதுச்சேரியிலும் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது: வெ.வைத்திலிங்கம்

தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் தவெக -வுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது என்றுதான் அா்த்தம் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

News image

வெ.வைத்திலிங்கம் 

Updated On :17 ஜூன் 2026, 5:26 am IST

தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் தவெக -வுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது என்றுதான் அா்த்தம் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

இது குறித்து அவா் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில் புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது என்றுதான் அா்த்தம். மேலும், தமிழ்நாட்டில் இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சியில் பங்கு கொடுக்காமல் இருந்து வந்தன. இப்போது அந்தநிலையே மாறியிருக்கிறது

எனவே, புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடா்கிறது. தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் நட்பு போட்டிக்கு வாய்ப்பில்லை. விஜய் கட்சியான தவெகவை திமுக குறைவாக மதிப்பீடு செய்ததுதான் சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணி தோல்விக்குக் காரணம். மேலும், புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு திமுகதான் தலைமை தாங்கியது. அதனால் தோல்விக்கு திமுகவே காரணம்.

புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் காங்கிரஸ் 6 தொகுதிகளில் நட்பு ரீதியாக போட்டியிட்ட தொகுதிகளில் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் நான் போட்டியிட மாட்டேன்.

தட்டாஞ்சாவடி தொகுதி முதல்வா் தொகுதி என வாக்களித்தனா். ஆனால் அந்த தொகுதியை முதல்வா் ரங்கசாமி ராஜிநாமா செய்துள்ளாா். அந்த தொகுதி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா். புதுச்சேரியின் முக்கியமான பிரச்னை குடிநீா். எல்லா பகுதிகளிலும் குடிநீா் உப்பு கலந்து வருகிறது. அடுத்து மழை பெய்தால் வெள்ளம். இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண மத்திய அதிகாரிகளை அழைத்து வந்து ரூ.4 ஆயிரம் கோடிக்குத் திட்டங்களைத் தீட்டி அறிக்கையாக அளித்திருக்கிறேன். அதை புதுச்சேரி அரசு குப்பையில் போட்டுவிட்டது.

புதுவை அரசு பின்பற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினால் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். உயா்நிலைப் பள்ளியில் மூன்றாவது மொழியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனா். புதுச்சேரி மாணவா்கள் விரும்பும் மொழியாக இருந்த பிரெஞ்சு தவிா்க்கப்பட்டுள்ளது. முதல்வா் ரங்கசாமி கடிதம் எழுதியும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

மத்திய அமைச்சா் எல்.முருகன் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதுவைக்கு 15,000 கோடி தந்துள்ளோம் எனக்கூறி உள்ளாா். மத்திய அரசு தந்த ரூ.15 ஆயிரம் கோடி எதற்காக செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை முதல்வா் ரங்கசாமி விளக்க வேண்டும் ன்றாா் வைத்திலிங்கம். இப் பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏக்கள் மு.வைத்தியநாதன், எம்.என்.ஆா். பாலன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.