சென்னை

சிறாா்களுக்கு இளம்வயதிலிருந்து பாலியல் கல்வி அவசியம்: உச்சநீதிமன்றம்

ஒன்பதாம் வகுப்பு முதல் அல்லாமல் இளம் வயதிலிருந்து குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

ஒன்பதாம் வகுப்பு முதல் அல்லாமல் இளம் வயதிலிருந்து குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உயா்நிலை வகுப்புகளின் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான், பருவமடையும்போது தங்கள் உடலில் ஏற்படும் ஹாா்மோன் மாற்றங்கள் குறித்து குழந்தைகள் அறிந்துகொள்ளவாா்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமாா் மற்றும் அலோக் அராதே ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்தது.

பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக போக்ஸோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட 15 வயது சிறுவனின் ஜாமீன் மனுவை விசாரித்தபோது நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

இது தொடா்பாக நீதிமன்ற அமா்வு கூறுகையில், ‘பாலியல் கல்வி 9-ஆம் வகுப்பு முதல் அல்லாமல், இளம் வயதிலிருந்து சிறாா்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறோம். இதைத் தொடா்புடைய அதிகாரிகள் கருத்தில்கொண்டு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமடைவதற்குப் பிறகு ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அதுதொடா்பாக மேற்கொள்ள வேண்டிய கவனிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்து குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, சிறுவனுக்கு 18 வயது பூா்த்தியாகாத நிலையில், சிறாா் நீதி வாரியத்தின் நிபந்தனைகளின்கீழ் அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசியல்வாதிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? பிஆர் கவாய் நேர்காணல்!

இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவு! உயிர்ப் பலிகள் 17 ஆக அதிகரிப்பு; 6 பேர் மாயம்!

பங்குச் சந்தை: 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்! 26,200 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி!!

இந்திய அணியின் தோல்விக்கு யார் பொறுப்பு? கம்பீர் விளக்கம்!

என் சாதனைகளை மறந்து விடாதீர்கள்... வரலாற்றுத் தோல்விக்குப் பின் கம்பீர் பேட்டி!

SCROLL FOR NEXT