முகப்பு
சென்னை

ராயப்பேட்டை: அம்மிக் கல்லால் மனைவியை தாக்கி கொன்றவர் கைது 

சென்னை, ராயப்பேட்டை பகுதியில் மனைவியிடம் தகராறு செய்து, அம்மி அரைக்கும் குழவி கல்லால் மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
ராயப்பேட்டை: அம்மிக் கல்லால் மனைவியை தாக்கி கொன்றவர் கைது
பகிர்:

சென்னை, ராயப்பேட்டை பகுதியில் மனைவியிடம் தகராறு செய்து, அம்மி அரைக்கும் குழவி கல்லால் மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.சென்னை, ராயப்பேட்டை பகுதியில் மனைவியிடம் தகராறு செய்து, அம்மி அரைக்கும் குழவி கல்லால் மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

சென்னை, இராயப்பேட்டையில் வசிக்கும் கனிமொழியின் கணவர் சுப்பிரமணி. இவர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்து, தற்போது 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கனிமொழிக்கும், கணவர் சுப்பிரமணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ள நிலையில், இன்று (17.09.2021) அதிகாலை சுமார் 01.15 மணிக்கு இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்பொழுது வாய் தகராறு முற்றி ஆத்திரத்தில் சுப்பிரமணி அருகிலிருந்த அம்மி அரைக்கும் குழவிக்கல்லை எடுத்து கனிமொழி தலையில் போட்டு, கொலை செய்து தப்பிச் சென்றுள்ளார். சத்தம் கேட்டு வீட்டிலிருந்த சகோதரர்கள் ஓடி வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்ததின்பேரில், ஆம்புலன்ஸ் குழுவினர் பரிசோதனை செய்ததில், கனிமொழி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, கனிமொழியின் சகோதரர் கந்தவேல், காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், கொலை பிரிவில் வழக்குப் பதிவு செய்து, கனிமொழியை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற அவரது கணவர் சுப்பிரமணி, இன்று காலை கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் சுப்பிரமணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →