விபத்தில் இளைஞர் சாவு
காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர், வாலாஜாபாத் பகுதிகளில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவர் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம்விபத்தில் இளைஞர் சாவு
காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர், வாலாஜாபாத் பகுதிகளில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவர் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர், வாலாஜாபாத் பகுதிகளில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வெங்களத்தூரைச் சேர்ந்தவர் கோதண்டராமன் (35). இவர் காஞ்சிபுரத்திலிருந்து வெங்களத்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் தனது மனைவி சித்ராவுடன் புதன்கிழமை சென்றுள்ளார். கீழ்கதிர்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே நாய் ஒன்று குறுக்கே ஓடியது. இதனால் கோதண்டராமன் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த கோதண்டராமனையும், லேசான காயமடைந்த அவரது மனைவியையும் அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோதண்டராமன் உயிரிழந்தார். இதுகுறித்து பாலுசெட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி பகுதியைச் சேர்ந்தவர் தாந்தோனி அம்மாள் (45). இவர் வாலாஜாபாத்திலிருந்து தென்னேரியை நோக்கி கடந்த நவம்பர் 2 ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, வாலாஜாபாத் ரயில்வே பாலம் அருகே சென்றபோது, கல் தடுக்கி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாலாஜாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, சுய நினைவின்றி இருந்த அவர், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நவம்பர் 8- ஆம் தேதி சுயநினைவு வந்த போது, அவரிடம் விசாரித்தனர். அப்போது, அவர் காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரியைச் சேர்ந்தவர் எனக் கூறிவிட்டு உயிரிழந்தார். இது குறித்தபுகாரின் பேரில், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.