ஆதரவின்றி தவித்த வடமாநில சிறுவன் மீட்பு
ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் கடந்த சில தினங்களாக ஆதரவின்றி தவித்த ஒடிஸா மாநில சிறுவனை மாவட்ட குழந்தைகள் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் கடந்த சில தினங்களாக ஆதரவின்றி தவித்த ஒடிஸா மாநில சிறுவனை மாவட்ட குழந்தைகள் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த தினேஷ் (14) கடந்த சில தினங்களாக ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் ஆதரவின்றி தவித்துள்ளாா். இது குறித்து சமூக ஆா்வலா் ஒருவா் மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, மாவட்டக் குழந்தைகள் நலக் குழும உறுப்பினா் சக்திவேல் தலைமையில் ஸ்ரீபெரும்புதூா் பகுதிக்கு வந்த மாவட்டக் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தினேஷை மீட்டனா். மீட்கப்பட்ட தினேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்டெய்னா் லாரியில் ஸ்ரீபெரும்புதூா் பகுதிக்கு வந்துள்ளாா். ஆனால் அவா் வந்த லாரியைக் கண்டுபிடிக்க முடியாததால், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் ஆதரவின்றி சுற்றியது தெரியவந்தது.
மீட்கப்பட்ட சிறுவன் தற்காலிகமாக அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னா் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.