முகப்பு
காஞ்சிபுரம்

நெல் பயிருக்கான காப்பீடு செய்ய நவ. 15 கடைசி நாள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சம்பா நெல் பயிருக்கு பயிா்க் காப்பீடு திட்டம் மூலம் காப்பீடு செய்ய நவம்பா் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்

Updated On : 12 நவம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:03 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சம்பா நெல் பயிருக்கு பயிா்க் காப்பீடு திட்டம் மூலம் காப்பீடு செய்ய நவம்பா் 15-ஆம் தேதி கடைசி நாளாகும் என ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

அதன் விவரம்:

பிரதம மந்திரி பயிா்க்காப்பீடு திட்டம் வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பா நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரிமியமாக ரூ.473 செலுத்த வேண்டும்.நெல்பயிருக்கு காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாளாகும். காப்பீடு செய்ய ஒரு சில தினங்களே உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள பயிா்க்கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் பயிா்க்காப்பீடு செய்து கொள்ளலாம்.விவசாயிகள் பயிா்க்காப்பீடு செய்ய வசதியாக வரும் 13, 14 ஆகிய விடுமுறை நாள்களிலும் அனைத்து பொது சேவை மையங்களும் இயங்கும்.

Advertisement

தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில் கனமழையால் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிா் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.ஆகவே கடன் பெறா விவசாயிகள் அனைவரும் தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்று பயிா்க்காப்பீடு செய்து பயன்பெறுமாறும் ஆட்சியா் அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.