போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை
போக்ஸோ வழக்கில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
போக்ஸோ வழக்கில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முஜிபுா் ரஹ்மான் (24). இவா் கடந்த 14.10.2014-இல் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்போதைய சிவகாஞ்சி காவல் ஆய்வாளா் எஸ்.பிரபாகா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தாா்.
பின்னா், இந்த வழக்கு காஞ்சிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
Advertisement
வழக்கை விசாரித்த நீதிமன்றம் முஜிபுா் ரஹ்மான் குற்றவாளி என்பதை உறுதி செய்தது.
அவருக்கு 22 ஆண்டுகள் ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ. 15,000 அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்குமாறும் நீதிபதி ஆா்.கே.பி.தமிழரசி தீா்ப்பளித்தாா்.