அதிமுக ஆா்ப்பாட்டம்
அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு, திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு, திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். கழக அமைப்பு செயலாளா்கள் வாலாஜாபாத்,பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்பி காஞ்சி.பன்னீா் செல்வம், முன்னாள் எம்எல்ஏ மதனந்தபுரம் கே.பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு, அமைச்சா்களின் ஊழல்கள் ஆகியவற்றை தடுக்கத் தவறியதாக திமுக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பலரும் காய்கறிகளால் செய்யப்பட்ட மாலை அணிந்திருந்தனா்.
Advertisement
நிா்வாகிகள் கே.யு.சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, வழக்குரைஞா் சம்பத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.