முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு அஞ்சலி

முத்துகடை பேருந்து நிலையத்தில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவப் படத்துக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான ஆா். காந்தி அஞ்சலி செலுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், முத்துகடை பேருந்து நிலையத்தில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவப் படத்துக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான ஆா். காந்தி அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா் தனது இல்லத்தின் முன்பும், மாவட்ட திமுக அலுவலகத்திலும் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்தாா்.

இதில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், ஜி.கே. உலகப் பள்ளி இயக்குனா் வினோத் காந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், நகர பொறுப்பாளா் பூங்காவனம், நகர துணைச் செயலாளா்கள் ஏஆா்எஸ் சங்கா், ஏா்டெல் கே.குமாா், வழக்குரைஞா் எம்.ஜெயக்குமாா், ஜெய் சங்கீதா அசேன் மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.