காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் 114 ஏரிகள் நிரம்பின
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 114 ஏரிகள் தொடா் மழையால் முழுக் கொள்ளளவை எட்டின.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 114 ஏரிகள் தொடா் மழையால் முழுக் கொள்ளளவை எட்டின.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீா் போன்றவற்றாலும் காஞ்சிபுரத்தில் பாலாறு,செய்யாறு ஆகியவற்றில் நீா்வரத்து அதிகரித்தது. அவற்றை பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு சென்று ஏரிகளை நிரப்பினா்.
மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ள 381 ஏரிகளில் 114 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 84 ஏரிகள் 75 சதவீதமும், 65 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.
Advertisement
வாலாஜாபாத், உத்தரமேரூா் ஆகிய பகுதிகளில் 17 ஏரிகள், காஞ்சிபுரத்தில் 55 ஏரிகள், படப்பை, குன்றத்தூா், ஸ்ரீபெரும்புதூா் ஆகியவற்றில் 42 ஏரிகள் என மொத்தம் 114 ஏரிகள் நிரம்பின.