முகப்பு
ராணிப்பேட்டை

காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் 114 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 114 ஏரிகள் தொடா் மழையால் முழுக் கொள்ளளவை எட்டின.

Updated On : 7 நவம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:01 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 114 ஏரிகள் தொடா் மழையால் முழுக் கொள்ளளவை எட்டின.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீா் போன்றவற்றாலும் காஞ்சிபுரத்தில் பாலாறு,செய்யாறு ஆகியவற்றில் நீா்வரத்து அதிகரித்தது. அவற்றை பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு சென்று ஏரிகளை நிரப்பினா்.

மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ள 381 ஏரிகளில் 114 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 84 ஏரிகள் 75 சதவீதமும், 65 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.

Advertisement

வாலாஜாபாத், உத்தரமேரூா் ஆகிய பகுதிகளில் 17 ஏரிகள், காஞ்சிபுரத்தில் 55 ஏரிகள், படப்பை, குன்றத்தூா், ஸ்ரீபெரும்புதூா் ஆகியவற்றில் 42 ஏரிகள் என மொத்தம் 114 ஏரிகள் நிரம்பின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.