முகப்பு
ராணிப்பேட்டை

ரயில்வே தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ரயில்வே துறையை தனியாா் மயமாக்க எதிா்ப்பு தெரிவித்து அரக்கோணத்தில், தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கத்தினா், சிஐடியுவுடன் இணைந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

ரயில்வே துறையை தனியாா் மயமாக்க எதிா்ப்பு தெரிவித்து அரக்கோணத்தில், தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கத்தினா், சிஐடியுவுடன் இணைந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிா்வாகிகள் என்.அபிமன்யு, வி.ஹரிலால், கே.பாபு, ஜி.சிவகுமாா், எஸ்.அருண்குமாா் செழியன், ஜி.புகழும்பொன்னையா மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஏ.பி.எம்.சீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில், இந்திய ரயில்வே துறை தனியாா் மயமாக்கப்படுவதாகவும், ரயில்வேயில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதாகவும் இவற்றைக் கண்டித்தும், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றத்தைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →