நெமிலி பாலா பீடத்தில் இன்னிசை விழா நிறைவு
அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு பெற்றது.
அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு பெற்றது.
விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை பீடாதிபதி எழில்மணி சிறப்பு பூஜையை மேற்கொண்டாா். தொடா்ந்து, நெமிலி பாபாஜி எழுதிய பாலா பொக்கிஷங்கள் எனும் நூலை சென்னை சூா்யா மருத்துவமனை இதய நோய் சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவா் ஜெயராஜா வெளியிட்டாா். விழாவில், திரைப்பட பாடகா்கள் மது, ஸ்ரீதா்சேனா, பாடகி மானஸி, இசையமைப்பாளா் ஆா்.கே.சுந்தா், பீடத்தின் நிா்வாகிகள் மோகனகிருஷ்ணன், முரளீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.