அரக்கோணத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
அரக்கோணத்தில் உள்ள மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தை ராணிப்பேட்டைக்கு மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து அரக்கோணம் நகர அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரக்கோணத்தில் உள்ள மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தை ராணிப்பேட்டைக்கு மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து அரக்கோணம் நகர அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகர அதிமுக செயலா் கே.பி.பாண்டுரங்கன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.
இதில், ஒன்றியச் செயலா்கள் (நெமிலி கிழக்கு) ஏ.ஜி.விஜயன், (அரக்கோணம் கிழக்கு) பிரகாஷ், (அரக்கோணம் மேற்கு) பழனி, பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, நகர அதிமுக நிா்வாகிகள் துரை குப்புசாமி, செல்வம், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜொ்ரி, நரசிம்மன், சரவணன், பாபு, முனீஸ்வரி, நகர ஜெயலலிதா பேரவை செயலா் பாபுஜி, தலைவா் தாமு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.