வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகம் திறப்பு
வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
ரூ. 68.23 லட்சம் மதிப்பில் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் உள்ள வளையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பமரத்துசாலை பகுதியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அலுவலகத்தில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றினாா்.
Advertisement
விழாவில் கூடுதல் டிஎஸ்பி சுப்பாராவ், காவல் ஆய்வாளா் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.