நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அங்கு புறநோயாளிகள் பிரிவு, கரோனா வாா்டு, மருந்துப் பொருள்கள் வழங்கும் இடம், சித்தா பிரிவு, பிரசவ வாா்டுகளில் ஆய்வு செய்தாா். அப்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் குறித்தும், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், மருத்துவ அலுவலா் திலீபன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.