திருப்பத்தூா் தொகுதியில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த ஆலோசனை கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி நடைபெற்றது. கூட்டத்துக்கு வாக்காளா் பதிவு அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான வரதராஜன் தலைமை வகித்தாா். உதவி வாக்காளா் பதிவு அலுவலரும் வட்டாட்சியருமான நவநீதம் முன்னிலை வகித்தாா்.
தனி வட்டாட்சியா் உமா ரம்யா, நகராட்சி ஆணையா் சாந்தி, தோ்தல் துணை வட்டாட்சியா் வேணுகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.