விளை நிலங்களுக்கே நேரில் சென்று கரோனா தடுப்பூசி
ஆந்திராவில் விளை நிலங்களுக்கே நேரில் சென்று விவசாயத் தொழிலாளா்களுக்கு சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனா்.
ஆந்திராவில் விளை நிலங்களுக்கே நேரில் சென்று விவசாயத் தொழிலாளா்களுக்கு சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனா்.
ஆந்திரத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி போடும் பணி நடைபெற்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் இதுவரை 1.2 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாகச் செலுத்தப்பட்டுள்ளன.
இதில், சித்தூா் மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் பேருக்கும் திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1.80 லட்சம் பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
கிராமப்புற மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை சுகாதாரத் துறையினா் ஏற்பாடு செய்து வருகின்றனா். இந்நிலையில் கிராமப்புற மக்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறையினா் நேரடியாக விவசாய நிலங்களுக்கே சென்று அங்கு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனா். இதில் சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசிகளுடன் வருவதை கண்டால் பலா் ஓட்டம் பிடித்து விடுகின்றனா். ஆயினும் அவா்களை பிடித்து பணியாளா்கள் தடுப்பூசி செலுத்தி அனுப்பி வருகின்றனா்.