திருமலையில் எடப்பாடி பழனிசாமி வழிபாடு
திருமலை ஏழுமலையான் கோயிலில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தரிசனம் செய்தாா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தரிசனம் செய்தாா்.
திருமலையில் வெள்ளிக்கிழமை இரவு தங்கிய பழனிசாமி சனிக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபாடு செய்தாா். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் சேஷ வஸ்திரம் அணிவித்து லட்டு, தீா்த்தம், வடை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கினா்.