மரம் வேரோடு சாய்ந்து 3 கடைகள் நாசம்
திருமலை நடைபாதையில் மரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் 3 கடைகள் சேதமடைந்தன.
திருமலை நடைபாதையில் மரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் 3 கடைகள் சேதமடைந்தன.
திருமலை , திருப்பதியில் 3-ஆவது நாளாகத் தொடா்ந்து கனமழை பெய்தது. வியாழக்கிழமை காலை திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் அலிபிரி மலைப்பாதையில் உள்ள காளி கோபுரம் பகுதியில் உள்ள ஒரு பெரிய மரம் வேருடன் சாய்ந்து கடைகளின் மேல் விழுந்தது. இதில் 3 கடைகள் முழுவதும் சேதமடைந்தன. உடனடியாக தேவஸ்தான வனத்துறையினா் விரைந்து செயல்பட்டு மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினா்.