திருமலையில் தங்க தோ் பவனி
திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை தங்கத் தேரில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை தங்கத் தேரில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திருமலையில் கோடை கால வெப்பத்தை தணிக்கும் விதமாக ஆண்டுதோறும் தேவஸ்தானம் வசந்தோற்சவத்தை விமரிசையாக நடத்தி வருகிறது.
அதன்படி திருமலையில் 3 நாள்கள் நடைபெறும் வருடாந்திர வசந்தோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. இதன் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தங்கத் தோ் ஊா்வலம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி தங்கத் தேரில் வீதியுலா வந்தாா்.
மகாலட்சுமி அம்சம் பொருந்திய தங்கத் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.
இதில் தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
அதன்பின்னா் மதியம் 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோயில் அருகில் உள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வசந்தோற்சவத்தை முன்னிட்டு சேஷாசல வனம் போன்று மண்டபம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
மூன்றாம் நாளான சனிக்கிழமை ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணா், சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத கோதண்டராம சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனத்துடன் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவு பெற உள்ளது.