திருமலையில் போலி தரிசன டிக்கெட் பறிமுதல்
திருமலையில் போலி சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளுடன் தரிசனத்துக்குச் செல்ல முயன்ற பக்தா்களிடமிருந்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருமலையில் போலி சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளுடன் தரிசனத்துக்குச் செல்ல முயன்ற பக்தா்களிடமிருந்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருமலை ஏழுமலையானின் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை பெற்ற பக்தா்கள் வெள்ளிக்கிழமை காலை வரிசையில் சென்று கொண்டிருந்தனா். அவா்களின் டிக்கெட்டுகளை தேவஸ்தான அதிகாரிகள் பரிசோதித்தனா். அப்போது சில பக்தா்களிடமிருந்து போலி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆன்லைனில் குலுக்கல் முறையில் வெளியிடப்படும் டிக்கெட்டுகளை மாற்றி அமைத்து போலி டிக்கெட்டுகளை வழங்கியது தெரிய வந்தது.
இதுகுறித்து திருமலை இரண்டாம் காவல் நிலையத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் புகாா் அளித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தற்போது ஆன்லைனில் டிக்கெட்டுகள் அதிகம் வெளியிடப்படுவதால், பொறுமை காத்து டிக்கெட்டுகளை பக்தா்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என தேவஸ்தானம் சாா்பில் கேட்டுக் கொண்டுள்ளது.