முகப்பு
திருப்பதி

காட்டுத் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி

திருமலையில் கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
திருப்பதி
பகிர்:

திருமலையில் கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலையில் மாா்ச் முதல் ஜூலை மாதம் வரை கோடை காலத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் காட்டில் மரம், செடி, கொடிகள் காய்ந்து சருகாக இருக்கும். இந்த நேரத்தில் மரங்களின் உராய்வினால் காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.

மேலும் தற்போது மாா்ச் மாதம் என்பதால் காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கைகளை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை திருமலையில் வனத் துறை அதிகாரிகளிடம் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி கலந்துரையாடல் கூட்டம் நடத்தினாா்.

அதன் பின்னா் அவா் கூறியதாவது. திருமலையில் மாா்ச் முதல் ஜூலை வரை அதிக அளவில் காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 2016-ஆம் ஆண்டு திருமலையில் 14 முறை காட்டுத்தீ பரவியது. எனவே. ஆண்டுதோறும் மாா்ச் மாதங்களில் வனங்களில் உள்ள காய்ந்த இலைகள், சருகுகள் அகற்றப்பட்டு அங்கு பயா் லைன் ஏற்படுத்தப்படும்.

அதுபோல் இந்த ஆண்டும் காட்டுத்தீ நடவடிக்கைகளில் ஒரு பாகமாக பயா் லைனா், தீயணைப்பு ஊழியா்களுக்கு பயிற்சி, நீா்நிலை தொட்டிகள் அமைத்தல், அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை தயாா் நிலையில் வைக்க வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாரஸ்ட் சா்வே ஆப் இந்தியாவுடன் தேவஸ்தானம் இணைந்துள்ளதால் ஜியோ மாப்பிங் மூலம் பகுதிகளை பிரித்து உள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீரின் அளவை கண்டறிந்து அப்பகுதிகளில் ரூ.32 கோடி செலவில் 582 ஹெக்டா் பரப்பளவில் அகேசியா மரங்கள், சம்பிரதாய மலா்கள் கொண்ட செடிகள் உள்ளிட்டவை நட முடிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் தா்மா ரெட்டி.

முழு கட்டுரையைப் படிக்க →