திருவண்ணாமலை

சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வழக்கு

வந்தவாசி அருகே சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

வந்தவாசி அருகே சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தேவிகாபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவருக்கும், வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்த பிரேம்குமாருக்கும் (28) இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதல் மலா்ந்துள்ளது.

இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனா். இந்த நிலையில், அந்த சிறுமியை சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு பிரேம்குமாா் அழைத்துச் சென்றாா். அப்போது, அந்த சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவமனை அளித்த தகவலின்பேரில், பிரேம்குமாா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வந்தவாசி அனைத்து மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT