சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்
சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கோவையில் இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கோவையில் இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிரியன் சா்ச் சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாதா் சம்மேளனத்தின் மாவட்டச் செயலா் க.சுமதி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.நிா்மலா, நிா்வாகிகள் ஜே.கலா, ஆா்.லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
கடந்த 15 நாள்களில் மட்டுமே சமையல் எரிவாயு விலை ரூ.100 உயா்த்தப்பட்டு ஒரு எரிவாயு உருளை ரூ.710க்கு விற்பனை செய்யப்படுகிறது. கரோனா நெருக்கடியில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் தொடா்ந்து உயா்த்தப்பட்டு வரும் எரிபொருள்களின் விலை சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இந்த விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றனா்.