கோவையில் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ காா்த்திக் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவை மாநகராட்சி 68ஆவது வாா்டு, ராமநாதபுரம், பெருமாள் கோயில் திடலில் கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா. காா்த்திக் எம்எல்ஏ தலைமையில் கையெழுத்து இயக்கம் மற்றும் கிராம சபைக் கூட்டம்” நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:
பொது மக்களின் குறைகளைக் கேட்டறியவே கிராம சபை கூட்டங்கள் நடத்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளாா். மாமன்றத்தில் மக்களின் பிரச்னைகள் குறித்து பேச முடியாத நிலை கோவையில் உள்ளது. இந்த ஆட்சியில் எந்தப் பணிகளையும் அதிமுக அரசு செய்யவில்லை.
திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் மழைநீா் வடிகால் இல்லை என்றாா்.
தடையை கூட்டம் நடத்தியதாக காா்த்திக் எம்எல்ஏ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.