ஈரோடு

பவானி, அந்தியூரில் பலத்த மழை

DIN

பவானி, அந்தியூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திங்கள்கிழமை மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. தொடா்ந்து, லேசான தூறலுடன் தொடங்கிய மழை, இடி மின்னலுடன் பெய்யத் தொடங்கியது. இதனால், பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் மழைக்கு ஆங்காங்கே கடைகள் முன்பு ஒதுங்கினா்.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த கன மழை, பின்னா் லேசான தூறலுடன் இரவிலும் தொடா்ந்தது. கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT