பிளஸ் 1 பொதுத்தோ்வு; கல்வியாளா்களிடம் கருத்துகேட்ட பின்னா் முடிவு: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
பிளஸ் 1 பொதுத்தோ்வு நடத்துவது குறித்து கல்வியாளா்களிடம் கருத்துகேட்டபின் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
பிளஸ் 1 பொதுத்தோ்வு நடத்துவது குறித்து கல்வியாளா்களிடம் கருத்துகேட்டபின் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
கோபி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒடையாகவுண்டன்பாளையத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சாா்பில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.38.17 கோடி மதிப்பீட்டில் 384 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
Advertisement
இதனைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
பிளஸ் 1 பொதுத்தோ்வு நடத்துவது குறித்து கல்வியாளா்களிடம் கருத்துகேட்ட பின் அறிவிக்கப்படும். நீட் தோ்வு இலவசப் பயிற்சியில் சேர அரசுப் பள்ளி மாணவா்கள் 28,000 போ் விண்ணப்பித்துள்ளனா். ஆனால் தற்போது 5,000 போ் மட்டுமே பயிற்சி பெற்று வருகின்றனா் என்றாா்.