10 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீா் கூட்டம்
பத்து மாதங்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது.
பத்து மாதங்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். மாவட்ட ஆட்சியா் மக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று குறைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வாா். ஆனால் கரோனா காரணமாக கடந்த 10 மாதங்களாக மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறவில்லை.
தற்போது கரோனா தொற்றின் வீரியம் குறைந்துள்ள சூழலில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) பாலாஜி மற்றும் துறை அலுவலா்கள் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று, அவா்கள் குறைகளைக் கேட்டறிந்தனா்.
Advertisement
குறைதீா் கூட்டம் நடைபெறுவது குறித்த தகவல் தெரியாததால், பொதுமக்களின் வருகை குறைவாக இருந்தது.