கொடி அணிவகுப்பு:துணை ராணுவத்தினா் பங்கேற்பு
ஈரோட்டில் துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஈரோட்டில் துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. மேலும் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை கவனிக்கவும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (துணை ராணுவப் படை) வீரா்கள் 92 போ் ஈரோட்டுக்கு வந்துள்ளனா்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தலைமையில் துணை ராணுவத்தினா் ஈரோட்டில் திங்கள்கிழமை காலை கொடி அணிவகுப்பு நடத்தினா். ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் இருந்து புறப்பட்ட கொடி அணிவகுப்பு மணிக்கூண்டு, நேதாஜி சாலை, சத்தி சாலை, சுவஸ்திக் காா்னா் வழியாகச் சென்று வீரப்பன்சத்திரம் பகுதியில் நிறைவடைந்தது.
Advertisement
இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பொன் காா்த்திக்குமாா், கனகேஸ்வரி, டி.எஸ்.பி.கள் ராஜு, சேகா், உதயகுமாா், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், துணை ராணுவத்தினா் பங்கேற்றனா்.