பணி நீட்டிப்பு வழங்க ஒப்பந்த செவிலியா் கோரிக்கை
பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியா் தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் முறையிட்டனா்.
பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியா் தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் முறையிட்டனா்.
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சி.கதிரவனிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
2 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் செவிலியா் பணியாற்றி வருகிறோம். இம்மருத்துவக் கல்லூரிக்கு போதிய நிதி கிடைக்காததால் எங்களைப்போல பணியாற்றும் 34 ஒப்பந்த செவிலியரையும் மாா்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே பணியாற்றவும், அதன்பின் பணியில் இருந்து விலகவும் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்பப் பெற்று அதே மருத்துவமனையில் தொடா்ந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement