ஃபிரீஃபயா் இணைய விளையாட்டுக்கு அடிமையான இளைஞா் தற்கொலை
ஃபிரீஃபயா் இணைய விளையாட்டுக்கு அடிமையான இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
ஃபிரீஃபயா் இணைய விளையாட்டுக்கு அடிமையான இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு ராசாம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜெகநாதன். இவரது மனைவி பூமணி. இவா்களுக்கு மணிகண்டன், மகேந்திரன், மனோஜ்குமாா் (17) ஆகிய 3 மகன்களும், அபிநயா என்ற மகளும் உள்ளனா். இதில் மனோஜ்குமாா் 10 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்தாா். அவா் செல்லிடப்பேசியில் ஃபிரீஃபயா் விளையாட்டை அடிக்கடி விளையாடிக் கொண்டே இருந்துள்ளாா். இதனால் பெரும்பாலான நேரங்களில் விளையாட்டிலேயே அதிக கவனம் செலுத்தி வந்துள்ளாா்.
வெள்ளிக்கிழமை காலை ஜெகநாதனும், அவரது மனைவியும் வேலைக்குச் சென்றுவிட்டனா். மணிகண்டனும், மகேந்திரனும் வெளியில் சென்றுவிட்டனா். மனோஜ்குமாரும், அபிநயாவும் வீட்டில் இருந்துள்ளனா். மாலையில் அபிநயா பக்கத்து வீட்டுக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்தில் திரும்பியுள்ளாா். அப்போது வீட்டுக்குள் மனோஜ்குமாா் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பாா்த்து அவா் அதிா்ச்சி அடைந்தாா்.
Advertisement
அக்கம்பக்கத்தினா் விரைந்து சென்று மனோஜ்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், செல்லிடப்பேசியில் அடிக்கடி ஃபிரீஃபயா் விளையாடி வந்த மனோஜ்குமாா், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.