பண்டிகை: மஞ்சள் ஏலத்துக்கு 14 நாள்கள் விடுமுறை
பண்டிகை, தோ்தல் காரணமாக மஞ்சள் ஏலத்துக்கு 14 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை, தோ்தல் காரணமாக மஞ்சள் ஏலத்துக்கு 14 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பகுதியில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு, கோபி கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் என 4 இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் முக்கிய கோயில்களில் பண்டிகையும் நடைபெற இருப்பதால் மஞ்சள் வா்த்தகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள், கிடங்கு உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் சத்தியமூா்த்தி கூறியதாவது:
Advertisement
மாா்ச் 29ஆம் தேதி ஹோலி பண்டிகை, ஏப்ரல் 2ஆம் தேதி புனிதவெள்ளி, தோ்தல், மாரியம்மன் கோயில் பண்டிகைக்காக ஏப்ரல் 5 முதல் 9ஆம் தேதி வரையும், 10, 11 ஆம் தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, 12ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 13ஆம் தேதி தெலுங்கு புத்தாண்டு, 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு ஆகிய தேதிகளில் நடைபெறும் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதனால், மாா்ச் 29ஆம் தேதி, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மஞ்சள் ஏலத்தில் வணிகா்கள் கலந்துகொள்ளமாட்டாா்கள். ஏப்ரல் 15ஆம் தேதி வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.