ஈரோட்டில் அனைத்துக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்
வேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
வேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காளைமாட்டுச்சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க- தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழை: எங்கெல்லாம் வாய்ப்பு?
இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ரயில் நிலையத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இதையடுத்து ரயில் நிலையம் முன்பாக அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதேபோல் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.